Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன பிரச்சனைக்காக பேசாமல் இருந்த காதலர்கள்.. விபரீத முடிவு எடுத்ததால் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 21 ஜூலை 2024 (07:40 IST)
சின்ன பிரச்சனைக்காக பேசாமல் இருந்த காதலர்கள் எடுத்த விபரீத முடிவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்  கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள அருள் வினித் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட ஒரு சின்ன தகராறு காரணமாக பேசாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் புவனேஸ்வரி அருள் வினித்தை செல்போனில்  தொடர்பு கொண்டு நீ என்னிடம் பேசவில்லை என்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் வினித் உடனடியாக புவனேஸ்வரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் தொங்கி இறந்து விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் இதனை அடுத்து மனம் உடைந்த அவர் தனது தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு சின்ன பிரச்சனைக்காக பேசாமல் இருந்த காதலர்கள் இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: மேயர் பிரியா திமுகவில் இருப்பதால் தான் குரல் கொடுக்கவில்லையா.. பா ரஞ்சித் கேள்வி

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஒரே நேரத்தில் வெடித்த ஏராளமான பேஜர் கருவிகள்.. 2750 பேர் காயம்.. 8 பேர் பலி..!

இன்று காலை 10 மணிக்குள் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments