Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேயர் பிரியா திமுகவில் இருப்பதால் தான் குரல் கொடுக்கவில்லையா.. பா ரஞ்சித் கேள்வி

Siva
ஞாயிறு, 21 ஜூலை 2024 (07:33 IST)
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நினைவேந்தல் பேரணி நடத்திய இயக்குனர் ரஞ்சித் நேற்று பேசியபோது, ‘நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல்வுடைவர்களாக மாறும் போது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும்;

மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் எப்படி உயர் பதவிகளுக்கு வந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பிரியாராஜன் திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை.
ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ்  அமைச்சராகவும் வாய்ப்பு கிடைத்தது

மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை?. நீங்கள் திமுகவில்  இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா”

ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று சமூக வலைதளங்களில் எழுதியவர்கள் அயோக்கியர்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று ஆவேசமாக பா ரஞ்சித் பேசினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments