Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலிப்பொந்தில் இருந்தவர்கள் எல்லாம் கட்சி தொடங்குகின்றனர். அன்பழகன்

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (15:15 IST)
தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் திடீரென அரசியல் பிரவேசம் செய்துள்ளதால்  பலரது முதல்வர் கனவு கானல் நீராகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் அவரது மரணத்திற்கு பின்னர் ஆட்சியை எளிதில் பிடித்துவிடலாம் என்ற கனவில் இருந்த நிலையில் அந்த கனவை கலைக்கும் வகையில் திடீரென இருவரும் அரசியல் பிரவேசம் செய்கின்றனர்.

எனவே பல அரசியல்வாதிகள் இருவரையும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன்னர் தமிழக அரசியல் வானில் புதிதாக பறக்கத் தொடங்கியுள்ள அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறிவிடும் என கமல், ரஜினியை மறைமுகமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதை பார்த்தோம்

இந்த நிலையில் புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், 'ஜெயலலிதா இருந்தவரை எலிப்பொந்துகளில் இருந்தவர்கள், தற்போது புற்றீசல் போல் கட்சிகளை துவங்குவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments