இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

Siva
புதன், 2 ஏப்ரல் 2025 (08:00 IST)
ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ்  அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நேற்று முதல் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ.பாஸ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ்  இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் பல சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்..

இந்த நிலையில், இ-பாஸ் முறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததாகவும், இதன் காரணமாக தங்கள் வணிகம் பாதிக்கப்படுவதாகவும் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் மற்றும் பொது வேலை நிறுத்தம் இன்று நடைபெற்று வருகிறது. இ-பாஸ் நடை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வணிகர்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடை அடைப்பு போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments