Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியை நிர்மலா கைது: போலீஸ் அதிரடி

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (19:13 IST)
தனியார் கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யபட்டார்.
 
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
 
பின்னர் மாணவிகளிடம் தவறாக பேசியதாக பேராசிரியர் நிர்மலா தேவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கல்லூரியின் நிர்வாகம் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் பேராசாரியை நிர்மலாவின் வீட்டின் பூட்டை அவரின் உறவினர் முன்னிலையில் போலீசார் உடைத்து அவரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments