ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை: முதல்வர் அமைத்த 6 பேர் கொண்ட குழு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (07:13 IST)
தமிழக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. 
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் என்பவர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
 
இந்த குழு நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை யார் யாரை விடுதலை செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த அறிக்கையின் அடிப்படையில் நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

அடுத்த கட்டுரையில்
Show comments