Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகாரில் சிக்கிய பூசாரி கைது.. கொடைக்கானலில் தலைமறைவாக இருந்ததாக தகவல்..!

Siva
செவ்வாய், 28 மே 2024 (09:08 IST)
சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவில் பூசாரி ஒருவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தலைவர் ஆக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் இளம்பெண் ஒருவர் அங்கு பூசாரியாக இருந்த கார்த்திக் முனுசாமி என்பவரிடம் பழகி உள்ளார். இருவரும் நட்பாக பழகிய நிலையில் ஒருநாள் பூசாரி கார்த்திக் முனுசாமி, இளம்பெண்ணை வீட்டில் விட்டு விடுவதாக காரில் அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர் தீர்த்தத்தை கொடுத்த நிலையில் தீர்த்தத்தை கொடுத்ததும் மயங்கி விழுந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் திடீரென கார்த்திக் முனுசாமி தலைமறைவானார். இந்த நிலையில் அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்