Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரெவி எதிரொலி: தமிழகத்தில் மின் தடை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (15:43 IST)
தமிழகத்தில் புரெவி புயல் கரையை கடக்கும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருமாறியுள்ள நிலையில் இலங்கையின் திரிகோண மலையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக பாம்பன் அருகே நெருங்கி கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில் கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
 
நாளை காலைக்குள் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் தமிழகத்தில் புரெவி புயல் கரையை கடக்கும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பின்னர் ஆய்வு செய்து வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

மதுரையில் கனமழை.. குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments