Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லாத வாக்குகளான 310 தபால் வாக்குகள் - காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:40 IST)
உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாததால் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.
 
9 மாவட்டங்களில் 74 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பமாக தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாததால் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments