Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் பொதுமக்கள் திடீர் போராட்டம்.. என்ன காரணம்?

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (11:49 IST)
சென்னை துறைமுகம் சாலையில் திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ய போராடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னையில் உள்ள சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 
 
கோடை வெயில் கொளுத்தி வரும் இந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் முதியவர்கள் உள்பட தூங்க முடியாமல் கஷ்டப்பட்டு உள்ளனர் என்றும் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லை என்பதை அடுத்து மின்துறை அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கம் கேட்டும் எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அதனால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சாலை மறியல் செய்யும் பொதுமக்களிடம் மின் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments