Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெப்ப அலை.. அரியலூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை. 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (11:42 IST)
தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் மேலும் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆறு மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வரும் நிலையில் இந்த ஆறு மாவட்டங்களில் கூடுதலான வெப்பம் பதிவாகும் என்று கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்பட 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று ஒரு பக்கம் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆறு மாவட்டங்களில் கடுமையான வெப்பம் பதிவாகும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments