Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ரத்தாகும் என்பதை எதிர்பார்த்தோம்: பூண்டி கலைவாணன்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (08:04 IST)
திருவாரூர் தேர்தல் ரத்தாகும் என்று ஏற்கனவே நாங்கள் எதிர்பார்த்தோம் என்று திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என கணிக்க முடிந்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சியோடுதான் இயங்குகிறதா என்ற கேள்வி தற்போது எழுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தபோது அதிமுக-பாஜக மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காதது ஏன்? பாஜக ஆயிரம் வாக்குகளைக்கூட வாங்காது என்பதால்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது என திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் ரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும்தான் காரணம் என்றும் அவர்களுக்கு தெரிந்துதான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே திருவாரூர் தேர்தல் நடத்த இது உகந்த நேரம் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments