மதுரை பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு: அமைச்சர் பொன்முடி அதிரடி..!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (15:15 IST)
நாளை மதுரையில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போகிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்றும் இதைவிட மோசமான ஆளுநர் இதுவரை தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து இருக்க வேண்டும் என்றும் இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை மதுரையில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள போவதில்லை என்றும் அதை புறக்கணிக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.  

ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் மீதெல்லாம் மரியாதை இல்லை என்றும் அதிலிருந்து வந்தவர் தான் என்பதால் ஆளுநர் மெத்தனத்தில் செயல்படுகிறார் என்றும் கூறினார்.  

நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments