Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருசில நிமிடங்களில் முடிந்த பொங்கல் ரயில் முன்பதிவு

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (20:31 IST)
தீபாவளி உள்பட முக்கிய விசேஷங்களுக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு முன்பதிவு செய்ய அனைவரும் முண்டியடித்து வரும் நிலையில் ஒருசில நிமிடங்களில் இந்த ரயில் டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்துவிடும் என்பது தெரிந்ததே

அந்த வகையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனவரி 11ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சற்றுமுன் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முந்தய தினம் போகிப்பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறை வருவதால் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு ஒருசில நிமிடங்களில் முடிந்தது

குறிப்பாக சென்னையிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஊர்களுக்கு செல்லும் டிக்கெட்டுக்கள் ஒருசில நிமிடங்களில் காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், 13ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது என்பதும் இந்த டிக்கெட்டுக்களும் ஒருசில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments