Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு - மக்கள் அதிருப்தி!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (11:05 IST)
பொங்கல் பரிசான 21 பொருட்கள் எடை குறைவாகவும் பாக்கெட் பாதிப்படைந்து இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

 
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் அரிசி அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 
 
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எடை குறைவாகவும் பாக்கெட் பாதிப்படைந்து இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
 
முந்திரி ஏலக்காய் திராட்சை பொருட்களில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் இருக்க வேண்டும். ஆனால், முந்திரி வெறும் 10 கிராம் திராட்சை 15 கிராம் ஏலக்காய் 2 கிராம் தான் இருக்கிறதாம். இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் குறைகள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments