Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கா? ஜல்லிக்கட்டா? - இதுவல்லவா பட்டிமன்றத்தின் தலைப்பு

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (16:43 IST)
பொங்கல் பண்டிகையின் போது மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
சென்னையை மையமாக கொண்டு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. குடிப்போருக்கு புணரமைப்பு, குடிக்காதவர்களுக்கு பாதுகாப்பு என்ற கொள்கையயை முன்னிறுத்தி செயல்படும் இந்த அமைப்பு குடிப்பவர்களுக்கு ஆதரவாக சிரிப்பை வரவழைக்கும் அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
 
இந்நிலையில், வருகிற 15ம் தேதி பொங்கலின் போது இந்த சங்கம் சார்பில் ஒரு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. “பொங்கல் திருவிழாவின் போது தமிழர்கள் பெரிதும் விரும்புவது சரக்கா, ஜல்லிக்கட்டா” என்பதுதான் அவர்கள் வைத்துள்ள தலைப்பு.
 
சென்னை கொரட்டூரில் நடைபெறும் இந்த பட்டிமன்றத்திற்கு இந்த சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் நடுவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரைக்கும் பல தலைப்புகளில் பட்டிமன்றத்தை பார்த்த தமிழர்களுக்கு இந்த பட்டிமன்றம் சிரிப்பை வரவழைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments