Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்த்துக் கட்டுன டயர்ட்ல டீ போட்டு குடிச்சோம்: கொலையாளி பகீர் வாக்குமூலம்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (16:46 IST)
புதுவையில் நேற்று நடைபெற்ற கொடூர கொலை சம்பவத்தில் பிடிபட்ட கொள்ளையர்கள் அதிரவைக்கும் விதமாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பாலகிருஷ்ணன்(72). இவரது மனைவி ஹேமலதா(65). இவர்களது இரு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று முன் தினம் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பணம், நகைக்காக இருவரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து விசாரிக்க போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பாலக்கிருஷ்ணனின் கார் டிரைவரே இந்த கொலையை அரங்கேற்றியது தெரிய வந்தது.
 
இதனையடுத்து அவனை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. வக்கீல் வசதியானவர் என்பதால் என் நண்பருடன் அவர் வீட்டில் நுழைந்து இருவரையும் கொலை செய்தோம். கஷ்டப்பட்டு கொலை செய்தது மிகவும் கலைப்பாக இருந்தது. இதனால் கிட்சனுக்குள் சென்று இருவரும் டீ போட்டு குடித்தோம். பின்னர் அங்கேயே சிறுநீர் கழித்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளான். போலீஸார் அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments