Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எண்ணூரில் வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (17:20 IST)
சென்னை எண்ணூரில் இன்று அதிகாலை திடீரென அமோனியா வாயு கசிந்த நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இதனை அடுத்து அமோனியா கசிவு ஏற்பட காரணமாக இருந்த தொழிற்சாலை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது சென்னை எண்ணூரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து உடனடியாக ஆய்வு குழு மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments