Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மத உணர்வை தூண்டுகிறாரா ஜீயர்?”.. முஸ்லீம் அமைப்பு புகார்

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (17:46 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், மத உணர்வை தூண்டுகிறார் என இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு புகார் அளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் நிகழ்வு நடந்தபொழுது, முற்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு அஞ்சி அத்திவரதரை மறைத்து வைத்தார்கள், தற்போது அந்த அவசியம் இல்லை, ஆதலால் அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என கூறியிருந்தார். ஜீயரின் இந்த வேண்டுகோளால் பெரும் சர்ச்சை உண்டானது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மத உணர்வை தூண்டுவது போல பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு புகார் அளித்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு போலீஸார் சம்மன் அளித்துள்ளனர்.அதன் படி வரும் 22 ஆம் தேதிக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி ஜீயருக்கு ஆணையிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments