Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி வாய்க்கொழுப்பெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்: பொள்ளாச்சி ஜெயராமன்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (07:42 IST)
உதயநிதி வாய்க்கொழுப்பெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார் என அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்  பேசியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மூத்தத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இயற்கை பேரிடர் காலத்தில் தமிழக மக்கள் நாதியற்றவர்களாக தவிக்கின்றனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டும். தமிழக மக்களை காப்பாற்ற நிதானமாக செயல்படக்கூடிய முதல்வராக எடப்படியார் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமை மாறும். உதயநிதி வாய்க்கொழுப்பு எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய பேச்சு விரைவில் அவருக்கு சரியான பாடத்தை சொல்லிக் கொடுக்கும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அவர், துடுக்குத்தனமாக பேசி சென்னையிலும் சேலத்திலும் இருந்து கொண்டு ஏதோ வெள்ளத்தில் நீந்தி மக்களின் கஷ்டங்களை நீக்குவது போல பேசுகிறார்.

ஏதோ வாயில் பேசுவது மட்டும் மக்களுக்கு தீர்வாகாது. நேரடியாக செயல்பட்டால் மட்டும் தான் மக்களுக்கு தீர்வாகும். அந்த செயல்பாடு எதுவும் உதயநிதியிடம் இல்லை.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments