Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடுகளை திருடி கறி விருந்து வைத்த அரசியல் பிரமுகர்!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (17:20 IST)
நாகை மாவட்டத்தில் இரு ஆடுகளை திருடிய அதிமுக பிரமுகர் ஒருவர் அதை கறி விருந்து செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள விளாகம் என்ற கிராமத்தில் ஒரு விவசாயில் தன் கொட்டகையில் இரவில்  ஆடுகளை கட்டிவைத்திருந்த நிலையில் காலையில் பார்க்கும் போதும் அதில் இரண்டை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் விவசாயி.

மேலும்,  அன்று அதேபகுதியில் ஒரு அதிமுக பிரமுகர் வீட்டில் ஆடு கறி விருந்து நடந்துள்ளது. அவருக்குக் கிடைத்த தகவலிம்படி இரு ஆடுகளில் ஒன்றை விற்று இந்த விருந்துக்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கியுள்ளதாக தெரிந்தது.

இதுகுறித்து விவசாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போலீஸாரிடம் அரசியல் பிரமுகர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இது குறித்து அவர்களை கண்டித்துள்ளதாகவும் , ஆடுக்கு  உரிய பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments