நாய் மீது பைக் ஏற்றிய காவல் உதவி ஆய்வாளர் ...சிசிடிவி வெளியீடு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (17:15 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் சக்திவேல்.  இவர், கடந்த வாரம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தற்காலிக சோதனைச் சாவடியில் பணி முடிந்து, நள்ளிரவு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் சாலையில் 10க்க்கும் மேற்பட்ட நாய்கள் படுத்திருந்தது. இதனைக் கவனிக்காத சக்திவேல் ஒரு நாயின் மீது தனது இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளார்.

வந்த வேகத்தில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த  காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை மருத்துவமனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவர் வாகனத்தில் சென்று, நாயின் மீது வாகனத்தை ஏற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், முக்கியமாக தலைக்கவசம் வைத்துள்ள அதை அணியாததே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments