Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (20:51 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் முகாம் நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த வருடம் சிறிது காலதாமதம் ஆனாலும் தற்போது போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் ஜனவரி 31ல் நடைபெற உள்ளதாக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 43 ஆயிரத்து 56 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனா அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள், கொரோனா தொற்று பாதிக்காத குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments