Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டமணி போல எட்டி உதைத்த போலீஸ்! – பணியிடை நீக்கம் செய்த ஆய்வாளர்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (11:55 IST)
ஆடு திருடிய நபரை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்த வீடியோ வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காவிலிபாளையம் பகுதியில் விவசாயி ஒருவரின் ஆடு வீட்டிற்கு வெளியே கட்டி இருந்துள்ளது. அதை இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் திருடி செல்ல முயன்றுள்ளனர். இதனை கண்டு அந்த விவசாயி கத்தியுள்ளார்.

இதை கேட்டு விரைந்த மக்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களை துரத்தி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பிவிட ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். அவரை பிடித்த மக்கள் போலீஸ்ய்க்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் முருகேஷ் ஆடு திருடியவரின் அந்தரங்க பகுதியில் உதைத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முருகேஷை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments