Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராட்டினத்தில் தலை சிக்கிய சிறுமி: தப்பி ஓடிய ஆப்பரேட்டர்! – சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (09:49 IST)
சென்னையில் ராட்டினத்தில் தலை சிக்கிய சிறுமியை மீட்காமல் தப்பிய ஓடிய ஆப்பரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான விளையாட்டு பூங்கா உள்ளது. அங்கு உள்ள ராட்டினம் ஒன்றில் சிறுமி ஏறியுள்ளார். ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமியின் தலை ராட்டினத்தின் பக்கவாட்டில் சிக்கி கொண்டது. அருகிலிருந்தவர்கள் கூச்சலிடவும் ராட்டினத்தின் ஆப்பரேட்டர் தப்பித்து ஓடி விட்டார்.

சம்பவம் அறிந்து உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்து நேரத்தில் சிறுமியை காப்பாற்றாமல் ஓடிய ஆபரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments