விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 9 டிசம்பர் 2025 (11:25 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அனுமதி மறுக்கப்பட்ட ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நிலைமையை சமாளிக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
 
கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய் பங்கேற்கும் முதல் கூட்டமான இது, புதுச்சேரி உப்பளம் துறைமுகத் திடலில் நடைபெற்றது. பாதுகாப்புக்காக 5,000 பேருக்கு மட்டுமே க்யூ.ஆர். குறியீடு உள்ள அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
 
பிரதான நுழைவு வாயிலில், அனுமதி அட்டை இல்லாத ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்யை பார்க்க முண்டியடித்து கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
 
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீஸார் கூட்டத்தினரை கலைக்க லேசான தடியடி நடத்தினர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments