Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்து எதிரொலி: யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (11:57 IST)
நேற்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி மற்றும் நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து தற்போது யாஷிகா ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மிக அதிவேகமாக ஓடியதாகவும் இதனையடுத்தே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்து விரைவில் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
யாஷிகா ஆனந்த், அவரது தோழி மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
கார் விபத்து காரணமாக யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments