Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டிய புது மாப்பிள்ளை; கைது செய்த போலீஸார்

Arun Prasath
செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:37 IST)
திருமணத்தில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டிய மாப்பிள்ளையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவேற்காடு பகுதியில் புவனேஷ் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல என அறியப்படுகிறார். ஆதலால் இத்திருமணத்தில் பச்சையப்பன் கல்லூரியில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இத்திருமணத்தை கொண்டாட விழாவிற்கு வந்த மாணவர்கள் 3 அடி பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டினர். மேலும் ஒரு மாணவன் பட்டக்கத்தியோடு நடனம் ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் திருவேற்காடு போலீஸார், மாமியார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றிருந்த புதுமாப்பிள்ளை புவனேஷை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments