Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி வரை சஸ்பென்ஸ் வைக்கும் பாமக.. முடிவில் திடீர் மாற்றம்..!

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (12:42 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று வரை அதிமுக கூட்டணியுடன் பாமக இணைவது உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது திடீரென பாஜக கூட்டணியில் இணைய மீண்டும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளிலே மிகவும் குழப்பமான கட்சிகளாக பாமக மற்றும் தேமுதிக இருப்பதாகவும் எந்த கூட்டணியில் இணைவது என்ற ஒரு கொள்கை முடிவு இல்லாமல் யார் அதிக சீட் தருகிறார்கள்? யார் அதிக பணம் தருகிறார்கள் என்ற பேச்சு வார்த்தையில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் தாட்டி வருகின்றனர்.

அதை  போல் தினமும் ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வரும் இரு கட்சிகள் நேற்று வரை அதிமுகவுடன் கிட்டத்தட்ட கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி பாஜக பக்கம் பாமக செல்ல உள்ளதாகவும் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, ஜி கே மணி பங்கேற்று பாஜக கூட்டணியில் இணைவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments