Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் ப்ளாட்பார்ம் டிக்கெட் உயர்வு!? – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (09:22 IST)
பண்டிகை காலங்கள் நெருங்கியுள்ள நிலையில் சென்னையில் சில ரயில் நிலையங்களில் ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் உள் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பயணிக்க பெரும்பாலும் ரயிலையே தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் ரயில் நிலையங்களில் அதிகரிக்கிறது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில் நிலையங்களின் ப்ளாட்பார்ம் டிக்கெட் விலையை அதிகரிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர் ஆகிய 8 ரயில் நிலையங்களிலும் நாளை அக்டோபர் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை ஒரு நபருக்கான ப்ளார்பார்ம் அனுமதி டிக்கெட்டின் விலை ரூ.10லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments