Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் பியூஷ் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சிறையில் பியூஷ் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (17:21 IST)
சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், காவல்துறையினரால் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறிய புகாரில் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

 

மக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்காமல், சேலம் முள்ளுவாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாகக் கூறி சேலம் மக்கள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து  ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் உள்ளிட்ட சிலரை கடந்த ஜூலை 8 ந்தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே கடந்த  20ந்தேதி பியூஷ் மனுஷின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் விடுதலையான அவர், பத்திரிகையாளர்களிடம், சிறையில் தன்னை 30 காவலர்கள் சேர்ந்து அடித்து துன்புறித்தியதாக புகார் தெரிவித்தார். 

இதுகுறித்து புகார் பதிவு செய்துகொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இதுதொடர்பாக 2 வாரத்திற்குள் தமிழக டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளர் இருவரும் பதிலளிக்க விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் எடுத்தால் அபராதம்.. பயணிகள் அதிருப்தி..!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகள் அதிர்ச்சி..!

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் அறிவிப்பால் அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

இன்று ஒரே நாளில் 32 மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை தொடர் அட்டகாசம்..!

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments