Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறாத பெட்ரோல் & டீசல் விலை... அதிகம் என்றாலும் மகிழ்ச்சி தான்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (08:43 IST)
சென்னையில் தொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102-ஐ கடந்துவிட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே விலையில் இருந்ததால் சென்னையிலும் விலை உயரவில்லை என்று குறிப்பிட்டு தெரிந்தன. 
 
இதனிடையே 14வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.49,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments