Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன ஓட்டிகளுக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கும் பெட்ரோல் விலை!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (09:45 IST)
தொடர்ந்து 12 ஆம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
மே 4 முதல் அமலுக்கு வந்த இந்த வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 46 காசு உயர்ந்து லிட்டர் ரூ.81.32க்கும், டீசல் 54 காசு உயர்ந்து லிட்டர் ரூ.74.23க்கும் விற்பனை ஆகிறது. 
 
கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.01 உயர்த்தப்பட்டுள்ளது என்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments