Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றில் பறந்த விதிமுறைகள்; பேருந்துகளில் குவியும் கூட்டம்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (10:18 IST)
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமலாகும் நிலையில் இன்று பேருந்தில் மக்கள் பலர் பயணிக்க குவிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றும், இன்றும் மட்டும் பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ள நிலையில், மக்கள் கூட்டம் பேருந்துகளில் அலை மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments