Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை கொலை செய்த பெற்றோர் - அதிரவைக்கும் சம்பவம்

Webdunia
திங்கள், 6 மே 2019 (20:10 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மணி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மோகனச் செல்வன் ( 30) என்பவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான செய்திகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மகேஷ் என்பவர் சிங்கப்பூரில்  வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். தனக்குக் கிடைக்கும் விடுமுறையில் இவர் அடிக்கடி காஞ்சிபுரம் வந்து செல்வதுண்டு. அப்படி ஒருநாள் இவர் விடுமுறைக்கு காஞ்சிபுரம் வந்த சமயத்தில் மதுபோதைக்கு அடிமையான அவர் குடித்துவிட்டு பெற்றோரிடம் தகராறு செய்துவிட்டு தூக்கில் தொங்கியுள்ளார். 
 
ஆனால் மோகன் செல்வன் உண்மையாலுமே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா ?இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பது சந்தேகமாகவே இருந்தது.
 
இந்நிலையில்  தற்போது வந்துள்ள செய்திகளாவது : சம்பவம் நடைபெற்ற அன்று மப்பு தலைக்கேற மதுகுடித்துவிட்டு வந்த மோகனச் செல்வன் தன் பெற்றோரிடம் தகராறு செய்து அவர்களை அடிக்கச் சென்றிருக்கிறார். இதனால் கோபாவேசம் அடைந்த தந்தை மணி தன்னுடைய  இரண்டு மகன்களுடன் சேர்ந்து மோகனச் செல்வனை அடித்து தூக்கில் தொங்கவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தற்போது இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments