Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்ட நெரிசல்: பரனூரில் சுங்க கட்டணம் ரத்து!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (16:10 IST)
பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் தற்காலிகமாக ரத்து என .பி கண்ணன் உத்தரவு. 
 
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 19 ஆம் தேதி முதல் அதாவது நாளை 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.  
 
இந்த முழு ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் இன்று நள்ளிரவு முதல் யாரும் வாகனங்களில் வெளியே வரகூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே பிழைப்பு தேடி சென்னை வந்தவர்கள் மீண்டும் சொந்த மாவட்டங்களுக்கு வீடு தேடி புறப்பட்டு வருகின்ரனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments