Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ஊரடங்கில் என்னென்ன இயங்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (16:07 IST)
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முழு ஊரடங்கில் ஒருசில நடவடிக்கைகளை அரசு அனுமதித்துள்ளது. அவை பின்வருவன:
 
* பிரீ பெய்ட் ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களை ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் இருந்து அழைத்து வர அனுமதிக்கலாம். 
 
* வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைமையகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்படலாம். 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை குறைந்த ஊழியர்களுடன் வங்கிகள் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை இயங்கலாம். 
 
* மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நிலை அலுவலர்களின் போக்குவரத்துக்காக தொழில்துறை மூலம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். 
 
* தொலை தொடர்பு, ஐ.டி. சேவை நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம். அந்த நிறுவனம் தரும் பட்டியலில் உள்ளவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும்.
 
* எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அது தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளது. 
 
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments