Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பன் பகுதியில் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்நீர்.. மீனவர்கள் அச்சம்..!

Mahendran
வியாழன், 11 ஏப்ரல் 2024 (11:02 IST)
தமிழக கடற்கரை ஓர பகுதிகளில் அவ்வப்போது திடீரென கடல் உள்வாங்கி வரும் வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர் கடல் அவ்வப்போது உள்வாங்கும் என்றும் அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அச்சப்படுகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவல் படி பாம்பன் பகுதியில் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கிதாகவும் இதனால் அந்த பகுதி மீனவர்கள் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது 
 
கடல் நீர் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள் தரைதட்டி இருக்கும் விலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து தெரிவித்த போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் உள்வாங்கி இருக்கலாம் என்றும் ஒரு சில நிமிடங்களில் கடல் நீர் இயல்பு நிலை திரும்பும் என்றும் எனவே மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் 
 
இருப்பினும் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் நீர் உள்வாங்கியதை அச்சத்துடனே பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பநிலை!? - வானிலை ஆய்வு மையம்!

தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் பரிதாப பலி.. குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் சோகம்..!

கொள்கை தலைவர்களின் சிலை திறப்பு.. மலர் தூவி மரியாதை செய்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments