Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் மணல் தேங்குவதை தடுக்க இப்படியெல்லாமா யோசிப்பாங்க..??

Arun Prasath
வியாழன், 26 செப்டம்பர் 2019 (17:57 IST)
தனுஷ்கோடியில் சூறைக்காற்றினால் சாலைகளில் மணல் தேங்குவதை தடுக்க, பனைமட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது வேடிக்கையான செயலாக பார்க்கப்படுகிறது.

தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சூறாவளி காற்று வீசுவதால், மணற்குன்றுகள் கலைந்து சாலைகளில் மணல் குவிகிறது.

எனினும் சாலைகளில் மணல் தேங்குவதால் அடுத்தக்கட்ட முயற்சியாக தனுஷ்கோடியில் நெடுஞ்சாலைத்துறையினர் பனைமட்டைகளால் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் பெரும் வேடிக்கையோடு நகைக்கின்றனர்.

மேலும் இது குறித்து நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், பனைமட்ட தடுப்புகள் மூலம் செயற்கையாக மணல் குன்றுகளை உருவாக்கும் இந்த யோசனை கூகுள் இணையத்தளத்தில் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். சாலைகளின் மணல் தேங்குவதை தடுக்க பனைமட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தியுள்ள செய்தி, வேடிக்கையான ஒன்றாகவும் நகைப்புக்குறியவையாகவும் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments