Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கந்தனுக்கு அரோகரா..!” விண்ணை முட்டிய முழக்கம்! – சிறப்பாக நடந்த பழனி கோவில் குடமுழுக்கு!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:10 IST)
இன்று பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இன்று குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

கோவில் மட்டுமல்லாம் கோவில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பல கூடுதல் வசதிகளும் செப்பனிடப்பட்டுள்ளன. இன்று குடமுழுக்கை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என அறநிலையத்துறை அறிவித்திருந்தது.

திரளான பக்தர்கள் சூழ தமிழில் திருப்புகழ், கந்தன் அலங்காரம் ஒலிக்க நன்னீராட்டு விழா நடைபெற்றது. அப்போது “கந்தனுக்கு அரோகரா” என பக்தர்கள் திரளாக முழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

8000 கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக சென்னை வாலிபரை இரண்டு பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments