Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் நாட்டுக்கு ரூ. 100 கோடி கடன் : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் ...

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (20:36 IST)
பாகிஸ்தான் நாட்டில் சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இந்நிலையில், அந்த நாட்டு அரசுக்கு உதவும் வகையில்  பாகிஸ்தானுக்கு அவசரகால கடனாக ரூ100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் மத்திய மற்றும் மேற்கு ஆசியாவிற்கான நிர்வாக இயக்குநர்  வெர்னர் லெய்பாக் கூறியுள்ளதாவது :
 
பாகிஸ்தான் நாட்டில் சில மாதங்களாக மிகக் குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் அதிகமான கடன் சுமை உள்ளதால், பாகிஸ்தான் அரசு கடும் பொருளாதார  சவால்களைச் சந்தித்துள்ளது.
 
அதனால், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக  வழங்கப்படும் கடனானது பாகிஸ்தானில் நிலவுகிற பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த உதவும். நிறுவனங்களின் வளர்ச்சியை சீராக்கவும் உதவுமென கூறியுள்ளது..
 
இந்த பண உதவி பாகிஸ்தான் நாட்டுக்கு கிடைத்தால், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments