Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு – ப சிதம்பரம் கைதா?

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (10:21 IST)
கடந்த 2009-2014 மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது நிதியமைச்சராகப் பணியாற்றியவர் ப சிதமபரம். அப்போது அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஏர்செல் நிறுவனத்திற்கு  சட்டவிரோதமாக ரூ 3500 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைக்கு அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து பாஜக ஆட்சியில் அந்த புகாரின் மீதான விசாரணை சூடு பிடித்தது. சிபிஐ தனியாகவும் அமலாக்கத்துறை தனியாகவும் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில் முன் ஜாமீன் கோரியிருந்த ப சிதம்பரத்திற்கு நீதிமன்றம் நவம்பர் 1-ந்தேதி(இன்று) வரை முன் ஜாமீன் அளித்து சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் இருவரையும் கைது செய்வதற்கு தடை விதித்திருந்தது. நேற்று முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நடிபெற்றது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் கூறப்பட்ட பதிலில் ‘ப சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பித்து வருகிறார். அதனால் அவரை எங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கை சம்மந்தமான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. ஒருவேளை அமலாக்கத்துறையின் கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில் ப சிதம்பரம் கைது செய்யப்படலான் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments