Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா டீ குடிக்க விருப்பம்: எளிமையாய் வந்திறங்கிய ஓபிஎஸ்!

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (15:29 IST)
சபரிமலை சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ் டீ குடிக்க இறங்கியபோது மக்கள் கூட்டம் அவரை சுற்றி வளைத்தது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஐயப்ப தரிசனத்திற்காக சபரிமலைக்கு சென்றிருந்தார். தரிசனம் முடித்துவிட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தவர் தேக்கடி அருகே வரும்போது கேரள டீ குடிக்க விரும்பியுள்ளார். இதற்காக காரை விட்டு இறங்கி அருகில் இருந்த தேநீர் கடைக்கு சென்றுள்ளார்.

துணை முதலமைச்சர் வந்திருக்கும் செய்தி அப்பகுதியில் வேகமாக பரவவே மக்கள் கூட்டம் அவரை காண குவிந்துள்ளது. டீ தயாராகாத நிலையில் மக்கள் கூட்டம் கூடிவிட்ட நிலையில் சிறிது நேரம் மக்களோடு பேசிக் கொண்டிருந்த ஓபிஎஸ் கூட்டம் அதிகமானதால் காரில் சென்று ஏறியுள்ளார். ஒருவழியாக தேநீர் தயாரிக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டது. காருக்குள் அமர்ந்தபடியே தேநீரை பருகிய ஓபிஎஸ் மக்களிடம் விடைப்பெற்று புறப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments