Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தள்ளுபடி: பெரும் பரபரப்பு!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (12:12 IST)
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையில் இரண்டு பிரிவுகளிலும் இருக்கும் ஆதரவாளர்கள் அவ்வப்போது மோதிக் கொள்ளும் காட்சிகளை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் அடுத்தடுத்து அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியில் மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் தலைமை நிர்வாகிகள் மட்டுமே மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் தொண்டர்களுடன் ஓபிஎஸ் வந்தபோது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments