Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன் அகால மரணம்! – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (11:52 IST)
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் உள்ளவர் சேகர் ரெட்டி. இவரது மகளுக்கும் தேவஸ்தான நிர்வாக அதிகாரியின் மகன் சந்திரமவுலி என்பவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டது.

வரும் ஜனவரி 26ல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சென்னையில் நடைபெற இருந்த திருமணத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாக இருந்தது. இந்நிலையில் நண்பர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற சந்திரமவுலி திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த சூழலில் நடந்த இந்த சம்பவம் சேகர் ரெட்டி குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நிறைவேறும்.. மக்களவையின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தையில் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சிறிய அளவில் ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மீண்டும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. இந்த முறை சென்னை அல்ல கோவை..!

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி-2024!

அடுத்த கட்டுரையில்