Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம்.. மொத்தம் 6 பேர் போட்டி..!

Siva
புதன், 27 மார்ச் 2024 (16:01 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே அவரைத் தவிர மேலும் நான்கு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் நிலையில் தற்போது கடைசி நேரத்தில் இன்னொரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்பட்டு வரும் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது பெயரில் உள்ள மேலும் 4 பேர் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்ததால் வாக்காளர்கள் குழப்பம் அடைவார்கள் என்று கூறப்பட்டது.
 
ஒரே தொகுதியில் ஒரே பெயரில் ஐந்து பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டால் சின்னத்தை வைத்து மட்டுமே அடையாளம் காண முடியும் என்ற நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எந்த அளவு அதை சமாளிப்பார் என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடையும் சில நிமிடங்களுக்கு முன் இன்னொரு ஓ பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மொத்தம் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்  உள்பட ஆறு பேர் ஒரே பெயரில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments