Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் என்னென்ன மாற்றம்?

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (12:15 IST)
புத்தாண்டு தினத்தன்று சில போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.


புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை மற்றும் நகரின் பிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து ஏற்பாடுகளை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

ஃபோர்ஷோர் சர்வீஸ் சாலை மற்ற கட்டுப்பாடுகளுடன் டிச. 31, ஜன. 1, 2023 இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். இதற்கிடையில், டிச., 31 மற்றும் புத்தாண்டு தினத்தன்று, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக காவல்துறையும் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் இரண்டு நாட்களும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பணியில் இருப்பர். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் கூடாது என்றும், இரண்டு நாட்களும் மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments