Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீர் பெறுவதற்கு ஓ. பன்னீர் செல்வம் குடும்பம் தடை ! - தினகரன் குற்றச்சாட்டு !

தண்ணீர் பெறுவதற்கு ஓ. பன்னீர் செல்வம் குடும்பம்  தடை ! - தினகரன் குற்றச்சாட்டு !
, திங்கள், 29 ஜூலை 2019 (14:43 IST)
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் கட்சியை பதிவு செய்ய மும்மரம் காட்டி வருவதால், வரும் வேலூர் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை.
இந்நிலையில் மதுரை  வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது :
 
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமை அரசு தூண்டுதலில் செயல்படக்கூடாது. நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசின் நிதியை திருப்பி அனுப்புவதன் மூலமாக தமிழக அரசின் மோசமான செய்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தமிழக அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதா என்று தெரிவிக்கவேண்டும்.
 
மேலும் முத்தலாக் விவகாரத்தில் தமிழர்களின் நிலைப்பாட்டை இஸ்லாமியர்கள்  நன்றாக புரிந்துவைத்துள்ளனர்.அதன் தலைமையும்  முரண்டாடாகத்தான் இருக்கிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து, வைகை அணைக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு மதுரையின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த வைகை குடிநீர் திருட்டுக்கு ஓ.பி.எஸ். குடும்பத்துக்கு தொடர்பு உள்ளது. பெரியாறிலிருந்து விவசாயிகள் தண்ணீர் பெறுவதில் ஓ.பி.எஸ் குடும்பம் தடுக்கக்கூடாது. வரும் வேலூர் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகவரிக் கேட்பது போல் செயின் பறிப்பு – தர்ம அடி குடுத்த பொதுமக்கள் !