Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேங்கை வயல் விவகாரம்: 600 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை இல்லையா?

Siva
புதன், 28 ஆகஸ்ட் 2024 (16:25 IST)
வேங்கை வயல் விவகாரம் நடந்து 600 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேங்கை வயல் பகுதியில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்து வரும் சிபிசிஐடி 600 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.  அதுமட்டுமின்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வேங்கை வேல் நீர்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இதுவரை 330 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 31 பேருக்கு டிஎன்ஏ சோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும். ஐந்து பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பு மனு தாக்கல் செய்து உள்ளது. இது குறித்து வேங்கை வயல் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறிய போது குற்றவாளிகள் யார் என்பதை நாங்கள் ஏற்கனவே சிபிசியிடம் சொல்லிவிட்டோம். இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது சிபிசிஐடி காவல் துறைக்கு தெரியும். ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கு தாமதம் செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments