Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது: அரசு அதிரடி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:01 IST)
தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி கொண்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் என்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பேருந்து கூட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் உள்ள தென் மாவட்ட மக்களின் வசதிக்காக அங்கிருந்தே தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

எனவே இனிமேல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரு பேருந்து கூட கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments